சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவை, போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய கண்ணீர்ப்புகைக் குண்டுகளை நிறுத்துமாறு இலங்கைக்கு அறிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படும் கண்ணீர் புகை குண்டுகளில் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு இரசாயனம் உள்ளதாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த நாட்டில் பொலிஸாருக்கு கண்ணீர் புகை விற்பனை மேற்கத்திய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்டு வருவதுவும் தெரியவந்துள்ளது.
இந்நாட்டில் நடக்கும் போராட்டங்களை அடக்க, குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் பணியில், போலீசார் ஈடுபட்டு வருவதால், பல போராட்டக்காரர்கள், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதன் காரணமாக கண்களில் எரிச்சல் மற்றும் மயக்கம் போன்றவற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.