பூஜ்ஜிய கோவிட் கோட்பாட்டில் உறுதியாக உள்ள சீனா, கடல் மீன்களையும் உயிரியல் மாதிரிக்காக (பிசிஆர்) சோதனை செய்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் கடல் உணவு நகரமான ஜியாமென் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மட்டுமின்றி, கடலில் இருந்து பிடிக்கும் மீன்களுக்கும் (பிசிஆர்) சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பூஜ்ஜிய கோவிட் கொள்கை காரணமாக சீன அதிகாரிகள் இந்த விசாரணையைத் தொடர்வதாகக் கூறப்படுகின்றது.
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், அங்குள்ள வெளிநாட்டைச் சேர்ந்த மீனவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதால், அவர்கள் மீன்பிடித் துறைமுகத்துக்குத் திரும்பியவுடன் அவர்களுக்கும், பிடிக்கும் மீன்களுக்கும் கோவிட் பரிசோதனை செய்ய வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் சட்டம் இயற்றியுள்ளனர்.
எனினும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், மீன்களுக்கு கோவிட் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை.
சீனாவில் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து அந்நாட்டின் பிரபல சமூக வலைதளமான தி கார்டியனின் பயனர்கள் வேடிக்கையான குறிப்புகளை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீனாக் கடற்பரப்பிற்கு வெளியில் இருந்து வரும் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை 07 நாட்களுக்குத் தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.