எதிர்காலத்தில் நாட்டுக்காக சில முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 14 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அனுராதபுரம் பூஜை தளத்திற்கு வந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே மேற் சொன்னவாறு தெரிவித்தார்கள்.
இவர்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரத்திற்கு பஸ்ஸில் வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.