நாடளாவிய ரீதியில் முட்டை விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்ய நுகர்வோர் விவகார அதிகாரசபை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக முட்டை விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும். சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாய் என்பதாகும்.
மேலும், உற்பத்தியாளர், தயாரிப்பாளர், வழங்குநர், விநியோகஸ்தர் அல்லது வர்த்தகர் ஆகியோர் நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலையில் வர்த்தகம் செய்யவோ, வழங்கவோ, வர்த்தகம் செய்யவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது என்றும் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் முட்டை விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறிய நுகர்வோர் அதிகாரசபை நேற்று முதல் சோதனைகளை ஆரம்பித்துள்ளது.
ஆனால், அதிக விலை கொடுத்து வாங்கும் முட்டைகளை, கட்டுப்பாட்டு விலையில் குறைந்த விலைக்கு விற்க முடியாது என, முட்டை வியாபாரிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல கருத்து தெரிவிக்கையில் முட்டை இருப்பு இவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டிருந்தால் அது தொடர்பான பில்களை கடை உரிமையாளர்களிடம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.