எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கோவிட்-19 ஊரடங்கு காரணமாக கடந்த காலத்தில் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்ட பிறகு, அவை முழுமையாக திறக்கப்படவில்லை.
தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள பதினேழு பல்கலைக்கழகங்களின் மொத்த மாணவர்களில் சுமார் 40 வீதமானவர்கள் தற்போது பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வருகின்றனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பிறமொழி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய கலந்துரையாடலில் அடுத்த மாதத்திற்குள் பல்கலைக்கழக முறைமையை முழுமையாகத் திறக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.