பேக்கரி உரிமையாளர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கினால் ஒரு பாண் ஒன்றின் விலையை 50 ரூபாவினாலும், ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை கணிசமான அளவிலும் குறைத்து மக்களை நிம்மதியடையச் செய்ய முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்
இதன்படி, அரசாங்கமும் அதிகாரிகளும் ஆதரவளித்தால் 400 கிராம் பாண் ஒன்றின் விலை 190 ரூபாவாக இருந்த உயர் விலையை 50 ரூபாவாலும் 100 ரூபா விலையில் விற்கப்படும் பன் ஒன்றின் விலையினை 25 ரூபாவாலும் குறைக்கப்பட முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை கணிசமாக குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பேக்கரி உற்பத்திக்குத் தேவையான பிரதான பொருட்களான மாவு, சீனி, நல்லெண்ணெய், முட்டை போன்றவற்றின் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ளதால், பேக்கரி உரிமையாளர்களுக்கு குறைந்த விலையில் உணவுகளை வழங்க முடியாத சூழல் இருப்பதனால் பேக்கரி உற்பத்திக்குத் தேவையான பொருட்களை வழங்கும் பட்ச்சத்தில் தற்போது உயர்ந்துள்ள பேக்கரி பேக்கரி உணவுகளின் விலையினை விலையை முடியும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.