2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் தேவையின் ஒரு பகுதியை வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் இணங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், பாடசாலை சீருடைகளுக்கு தேவையான கூடுதல் அளவு துணிகள் உள்ளூர் சப்ளையர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.