கிராமப் பொருளாதாரத்தின் இதயமாக இருந்த கூட்டுறவு சங்கங்களை இல்லாமல் ஆக்கிவிடாதீர்கள் என ஆளுநர்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்மையில் கொழும்பில் உள்ள பிரதமர் செயலகத்தில் மாகாண ஆளுநர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்..
“ஒவ்வொரு மாகாண சபையிலும் உள்ள தகவல் ஆதாரங்களின் படி கூட்டுறவு சங்கங்கள் அழியும் சூழ்நிலையில் உள்ளது என்பதை நிரூபிக்கின்றது. இவ் கூட்டுறவு சங்கங்கலானது அரச அதிகாரிகள் அல்ல. கிராமப்புற உறுப்பினர்கள். மேலும் அவர்கள் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்க விரும்புகின்றார்கள். சில உற்பத்தி சங்கங்கள். சில வர்த்தக விநியோக சங்கங்கள். என வேறுபட்டாலும் அவை இலங்கையின் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய மாபெரும் அமைப்பாகும். கூட்டுறவு சங்கங்களின் மறுமலர்ச்சிக்காக நாம் அடையாளம் கண்டுள்ள மறுமலர்ச்சியின் முக்கிய பகுதிகளை செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் கூட்டுறவு ஆணையர்கள் உட்பட ஒவ்வொரு அதிகாரிகளையும் உடனே தயாராகச் சொல்லுங்கள், வேலை செய்யச் சொல்லுங்கள். சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன் இந்த பிரச்சாரம் முக்கியமானது. உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துதல். ஒரு காலத்தில் கிராமப் பொருளாதாரத்தின் இதயமாக இருந்த கூட்டுறவு சங்கங்களை முடிந்த அளவு மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முயற்சியுங்கள் என்று தெரிவித்தார்.”