கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பாணந்துறை ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 53 வயதுடைய வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.