பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தாரிக் இ இன்சாப் கட்சியினர் தற்போது எதிர்ப்பு பேரணிகளை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது அந்நாட்டு அரசுக்கு எதிரானது. நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். அரசு நடத்தும் அடக்குமுறை திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பிடிஐ உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது கட்சி உறுப்பினர்களிடம் பேசுகையில், ஊழல் அரசியல்வாதிகளால் நாடு கடுமையான நெருக்கடியை நோக்கி செல்கிறது என்று தெரிவித்தார்.
அந்த ஊழல் அரசியல்வாதிகளுக்கு காவல்துறை பாதுகாப்பளிக்கும் என்றும் முன்னாள் பிரதமர் கூறியுள்ளார். பணவீக்கம் மற்றும் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக பாகிஸ்தானும் இலங்கையைப் போன்று நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
தன்னை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா சதி செய்ததாகவும், அதற்கு பாகிஸ்தானிடம் இருந்தே ஆதரவு கிடைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் ஆதரவாக வெளிவிவகாரக் கொள்கையினால் அமெரிக்கா தமக்கு எதிராக இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.