கொரோனா நோய் நிலைமை புறக்கணிக்கப்பட்டதால், கட்டுப்பாடில்லாமல் பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தியால் இந்நோய் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம் எனவும் அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார ஆலோசனைகள் இன்றி தற்போது பல சமூக ஒன்றுகூடல்கள் நடத்தப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.