மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று 12 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து.
மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு அரசாங்கத்திற்கு சொந்தமான நிதியில் இருந்து பணத்தை தவறாக பயன்படுத்தியமை உட்பட 07 குற்றச்சாட்டுகளும், அதிகார துஷ்பிரயோகம் உட்பட 07 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு 2020 ஆம் ஆண்டு அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.
எவ்வாறாயினும், மேன்முறையீடு காரணமாக அவர் தற்போது வரை பிணையில் விடுவிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தனக்கு எதிரான சிறைத்தண்டனையை நிறைவேற்றுவதை தாமதப்படுத்துமாறு முன்னாள் பிரதமரின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதன்படி, 12 வருட சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு நீதிமன்றத்தினால் 210 மில்லியன் ரியாஸ் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தற்போது தனது 69வது வயதில் இருக்கிறார்.