கடந்த 8 நாட்களில் 5007 மெற்றிக் தொன் நெல் அறுவடை கடந்த 8 நாட்களில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. கடந்த 18ம் திகதி முதல் புதிய பருவ நெல் அறுவடையை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் நீல் டி அல்விஸ் தெரிவித்தார்.
இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு நெற்செய்கைக்காக 50 கிலோ எடையுள்ள 375,000 யூரியா உர மூட்டைகளை வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
ஒரு ஏக்கருக்கு குறைவாக நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த யூரியா உரம் கையிருப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது. உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உயர் பருவத்திற்கான யூரியா உரத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆயிரம் மெட்ரிக் தொன்கள் கொண்ட முதல் தொகுதி அடுத்த இரண்டு வாரங்களில் மக்களுக்கு வழங்கப்படும்.