சுமார் ஐந்து மில்லியன் ரூபா மற்றும் ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் எடுத்துவந்த பயணி ஒருவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகள் குழு இன்று அதிகாலை கைது செய்துள்ளது.
அவர் சுமார் 10 வருடங்களாக பிரான்ஸின் பரிஸ் நகரில் பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பிய கொழும்பு மாலபே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று காலை 05.45 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-564 பிரான்ஸ் பாரிஸில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
குறித்த பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பிரகடனப்படுத்த எதுவுமில்லாத பசுமை பாதை ஊடாக வெளியேற முற்பட்ட வேளையில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
02 கிலோ 414 கிராம் எடையுள்ள இந்த நகைகளில் அவர் கழுத்தில் 586.8 கிராம் எடையுள்ள நெக்லஸ் அணிந்திருந்ததாகவும், மற்ற நகைகள் அவர் வைத்திருந்த லக்கேஜில் கவனமாக மறைத்து வைத்திருந்ததாகவும் அவரை கைது செய்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.