கம்பஹா கோண்டா வெட்டு தளத்தில் நேற்று இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 05 பேர்பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெத்தியகொட, மகேவிட்ட மற்றும் கொட்டுகுடா பிரதேசங்களைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கடந்த 6ஆம் திகதி மேற்கொண்ட கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.