இலங்கையில் கனிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு 10 நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இந்தியா, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் இத்தகைய முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு இது தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பில் ஆராய்ந்து 06 வாரங்களுக்குள் இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.