ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஏனைய இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியும் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹரகமவில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதிப் பேரவைக் கூட்டத்தில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.