பல்வேறு பிரச்சினைகளால் நியமனம் கிடைக்காதவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க பாடுபடவுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (29) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பல்வேறு குறைபாடுகள் காரணமாக 461 பேருக்கு நியமனம் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், அமைச்சின் செயலாளர் இது தொடர்பான கலந்துரையாடல்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் கருத்து தெரிவிகையில்.
கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, பொது நிர்வாக அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களில் இதுவரை பதவிக்காலம் பெறாத தகுதியான நபர்களின் எண்ணிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சின் செயலாளர் ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளார். அதற்கான தீர்வை வழங்க முயற்சிப்பேன் என நம்புகிறேன் என தெரிவித்தார்.