முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பான ஆவணம் இதுவரை ஊடகங்களுக்கோ அல்லது வேறு எந்த தரப்பினருக்கோ வழங்கப்படவில்லை.
இது தொடர்பில் நீதியமைச்சிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், அதனை ஊடகங்களுக்கு வெளியிட அனுமதி இல்லை என அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்தார்.
அதை ஜனாதிபதி அலுவலகம் மூலம் பெற முயற்சி செய்யுங்கள் என்றார்.
பின்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவினரை தொடர்பு கொண்டு அதற்கான ஆவணத்தை கேட்டோம்.அவர்கள் அதனை உடனடியாக வழங்குவதாக தெரிவித்தனர்.இதேவேளை எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த ஆவணத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இன்று(29) கோரிக்கை விடுத்தார்.
இன்று காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் அதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ கடிதத்தை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பான ஆவணம் “ஆய்வு செய்யப்பட வேண்டும்” என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.