இலங்கை கேட்டரிங் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகத்தின் 49 சதவீத பங்குகளையும், விமான நிலைய நடவடிக்கைகள் மற்றும் அதன் நிர்வாகத்தின் 49 சதவீத பங்குகளையும் முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்குவதற்கான முன்மொழிவுகளை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அதன் மூலம் கிடைக்கும் பணம் ஸ்ரீலங்கன் விமான சேவையை முடிந்தளவு கடனில் இருந்து விடுவிப்பதற்காக பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.