ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, திலும் அமுனுகம, ரோஹித அபேகுணவர்தன, சாகர காரியவசம், மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.