எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் பணி ஒரு வருடத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட வேண்டும் என கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த பொருட்கள் தற்போதும் அவ்வப்போது கரையில் குவிக்கப்படுவதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் மூலம் கடலில் விழுந்து கடற்கரையில் குவிந்திருந்த சுமார் 1600 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.