2021 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2% ஆக இருந்த அரச வருமானத்தை 2025 ஆம் ஆண்டளவில் 15% ஆக அதிகரிக்க எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.
வருவாயை அதிகரிப்பதற்கான புதிய முன்மொழிவுகள் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.