இன்று இரவு முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு நீர்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்தனகலு, களு, களனி, கிங், நில்வலா மற்றும் மகாவலி ஆகிய பிரதேசங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று இரவு முதல் எதிர்வரும் சில நாட்களில் ஏற்படக்கூடிய வெள்ள நிலைமைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களைக்கேட்டுக்கொண்டுள்ளது.