எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து கடந்த 4 நாட்களில் பெரும்பாலான எரிபொருள் இருப்புக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து நாளாந்தம் 4000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 3000 மெற்றிக் தொன் பெற்றோல் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேருந்துகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகளுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நேற்றிரவு 35,000 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோல் இறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.