பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு அவசர கடனுதவி வழங்குவது தொடர்பில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இடையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை மேலும் தெரிவித்துள்ளது.
07 தசாப்த கால வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 03 பில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்றிரவு சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகள் ஆரம்ப நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.