நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தின் குழு அறை இலக்கம் 1 இல் பிற்பகல் 02:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிதி விவகாரங்கள் தொடர்பான பாராளுமன்ற விவாதங்களில் எம்.பி.க்கள் தீவிரமாக பங்கேற்பதை உறுதிசெய்து, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் எதிர்கால பொருளாதார பாதை குறித்து பயனுள்ள சொற்பொழிவை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.