கெப் ஒன்றில் 10.4 கிலோ ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (31) காலை 06.15 மணியளவில் தலைமன்னாரிலிருந்து மன்னார் இராணுவ வீதித் தடை ஊடாக வான்கலை நோக்கி பயணிக்க முற்பட்ட போதே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 32 மற்றும் 36 வயதுடையவர்கள்.
போதைப்பொருள் கையிருப்பின் மொத்த பெறுமதி சுமார் 150 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
54 ஆவது காலாட்படைப் பிரிவின் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் 11 ஆவது பீரங்கிப் படையின் சிப்பாய்களினால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கெப் வண்டி மற்றும் போதைப்பொருள் கையிருப்புடன் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.