பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமைக்காக ஐந்து இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு பலாங்கொடை பதில் நீதவான் ஏ.எம்.எஸ். மெனிகே உத்தரவிட்டுள்ளார்.
நான்கு வெள்ளை முட்டைகளை 260 ரூபாய்க்கு விற்ற நபருக்கும் அவரது வர்த்தக நிலையத்திற்கும் இவ் அபராதம் விதிக்கப்பட்டுக்காது.
சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையத்தில் நுகர்வோர் ஒருவரினால் முட்டைகள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், ஒரு முட்டைகளுக்கு தலா 65 ரூபா வீதம் நான்கு முட்டைகளுக்கு 260 ரூபா அறவிடப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பலாங்கொடை பதில் நீதவான் ஏ.எம்.எஸ். மெனிகே ஐந்து லட்சம் ரூபா அபராதத்தினை குறித்த நபருக்கு நிர்ணயித்தார்.