முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தாம் சிறிசேன, பொலன்னறுவை – மேற்குத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக நியமனத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த பதவி தொடர்பான நியமனக் கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய கையினால் பெற்றுக் கொள்ளும் புகைப்படத்தை தனது முகநூலில் பதிவிட்டார் தாம் சிறிசேன,
மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேல் நம்பிக்கை வைத்துள்ள அனைவரினதும் நம்பிக்கையைப் பாதுகாத்து நிறைவேற்றுவேன் என தெரிவித்துள்ள தாம் சிறிசேன. சுதந்திரக் கட்சியினால் வழங்கப்பட்ட பொறுப்பு மற்றும் மக்களுக்கான சிறந்த சேவையை செய்வேன் எனவும் பதிவிட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் பேரவையின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.