ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் (EPF) நன்மை மற்றும் முதலாளியைப் பதிவு செய்வதற்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வதற்கான labourdept.gov.lk என்கின்ற இணையதளம் இன்று (01) தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
அங்கு உரையாற்றிய அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர் செயலகத்தில் பொது மக்கள் அசோகாரியப்படுவதை இது தவிர்க்கும் வகையில், முன் கூட்டியே சந்திப்பை பதிவு செய்வதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதனால் மக்களுக்கு ஏற்படும் அசோகாரியங்கள் குறைக்க முடியும் எனவும் மேலும், தொழிலாளர் அலுவலகத்தின் மற்ற அனைத்து செயல்பாடுகளும் இதே முறையில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தலைமை அலுவலகம் மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்கள், மாகாணங்கள் மற்றும் கல்லூரிகள் இதன் மூலம் சேவைகளை வழங்க நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம், மேலும் பொது பலன் விண்ணப்பம், இறந்த உறுப்பினரின் வாரிசு பயன் விண்ணப்பம் மற்றும் பணியமர்த்துபவர்களின் பதிவுகளையும் இதன் மூலம் மேற்கொள்ளலாம்.
இதன்படி, நாரஹேன்பிட்டி தொழிலாளர் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட ONLINE வசதி இனி 40 மாவட்ட அலுவலகங்கள், 17 கல்லூரிகள் மற்றும் 11 பிராந்திய அலுவலகங்களில் இருந்து செயற்படுத்த முடியும்.