திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவரும் சலிது அல்லது பாணந்துறை “குடு சாலிடு” என்பவரின் பிரதான சீடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இவர் வாத்துவ, ஸ்ரீ விக்கிரமசிங்க வீதி பகுதியில் குற்றச்செயல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி செயற்பட்ட இந்த அதிகாரிகள் சந்தேக நபர் வைத்திருந்த வாளுடன் சந்தேக நபரை கைது செய்தனர். வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பது வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வாத்துவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.