நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பொறுப்பான தரப்பினர் நல்ல ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதன் மூலம் நாட்டை உயர்த்த முடியும் என கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.