பிடிகல – தல்கஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (03) இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பிடிகல – மியாகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
ஊருக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே, வீட்டுக்கு அருகில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.