மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதியில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இன்று (04) காலை முன்மொழிவுகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களுடனான சந்திப்பும், அதற்கான மறுசீரமைப்புக்கான வேலைத்திட்டம் ஒன்றும் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்குழு ஏற்கனவே பல்வேறு அபிவிருத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் மின்சரத்துறையினை சேர்ந்த பங்குதாரர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன், அடுத்த வாரம் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுடன் மின்சார சபையை மறுசீரமைப்பது குறித்து கலந்துரையாடவுள்ளது.