இன்று முதல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாடிக்கையாளர்கள் கடன் அட்டைகள் உட்பட அனைத்து இலத்திரனியல் அட்டைகள் மூலமும் பணம் செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அபிவிருத்தி ட்ரொபி டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, புதிய தொழில்நுட்பத்திற்கு அமைவாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து கொடுப்பனவுகளும் பணமாக பயன்படுத்தப்படாமல் இலத்திரனியல் அட்டைகள் மூலம் மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.