கிளைபோசேட் இறக்குமதியை அனுமதிக்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குகள் அடங்கிய பாத்திரம் நாளை (6) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ், தோட்டத் துறைக்கு களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் கிளைபோசேட் இறக்குமதியை அனுமதிப்பது தொடர்பாக இயற்றப்பட்ட ஒழுங்குமுறைகள் அண்மையில் அரசாங்க நிதிக் குழுவில் பரிசீலிக்கப்பட்டு, நீண்ட கலந்துரையாடலின் பின்னர், அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அரசாங்க நிதி தொடர்பான குழு அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் கூடிய போது இந்த அனுமதி கிடைத்துள்ளது.
இந்த வர்த்தமானியின் பிரகாரம் பூச்சிக்கொல்லி பதிவாளரின் சிபாரிசுக்கு உட்பட்டு கிளைபோசேட் இறக்குமதி உரிமம் வழங்கப்படும்.
இந்த விதிமுறைகளுக்கு அரசின் நிதிக்குழு ஒப்புதல் அளித்துள்ள போதிலும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் என குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.