மே 09 ஆம் திகதி நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர்.
அங்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிள்ளைகளின் கல்வி உட்பட ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறும் தெரிவித்தார்.