ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட யோசனையின்படி, அரச நிறுவனங்களில் குவிந்துள்ள கழிவுப்பொருட்களை அகற்றும் முழு செயல்முறையையும் மேற்பார்வையிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கழிவுப் பொருட்களை உரிய நேரத்தில் அகற்றாமையால் அரசாங்கத்திற்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்படுவதும், அவ்வாறான பொருட்களால் அலுவலக வளாகம் மற்றும் அரச கட்டிடங்களில் உள்ள இடங்கள் தேவையின்றி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, அந்தப் பொருட்களை விரைவாகவும் முறையாகவும் அகற்றுவதற்கான நடைமுறைகளை நிறைவு செய்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.