யூ.கே. காலித்தீன், எம்.என்.எம்.அப்ராஸ்
ஆயுள்வேத வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.எம். றிசாத் தலைமையிலும், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி யூ.எல். சம்சுடீன் அவர்களின் நெரிப்படுத்தலிலும் இன்று (06) ந் திகதி நடைபெற்ற நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் ஆயுள்வேத வைத்தியசாலைகளின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் நபில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
அத்தோடு, கிராமிய தொழிற்பயிற்சி நிலையத்தின் பொருப்பதிகாரி எம்.எம். உதுமாலெவ்வை, கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் பிரிவின் பொருப்பதிகாரி யு.எம். இஸ்ஹாக்,
பிராஜா உரிமைகள் அமைப்பின் தலைவரும் முன்னாள் அதிபருமான எம்.எம். இஸ்மாயில், கிராம நிலதாரி, எல்.நாசர் உட்பட ஏனைய அதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது ஆயுள்வேத வைத்தியர்களான வைத்தியர் எஸ்.எம். றிசாத் மற்றும் வைத்தியர் ஏ.எஸ். என் சூசான் ஆகியோரினால் பொதுமக்களுக்கான ஆயுள்வேத வைத்திய முகாமும் இடம்பெற்று சிகிச்சையளிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.