இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை குறித்து யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை மற்றும் சுகாதார கணக்கெடுப்பு தரவுகளை கருத்திற்கொண்டு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.