யூ.கே. காலித்தீன்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது பொலிஸ் தினத்தினை முன்னிட்டு அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் சாய்ந்தமருது கடற்கரை ஒட்டிய பிரதேசத்தில் பாரிய சிரமதான நிகழ்வுகள் இன்று (07) இடம்பெற்றது.
சாய்ந்தமருது பொலிஸ் நிலையதின் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலும், கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது வலயத்தின் திண்மக் கழிவகற்றல் பிரிவின் சுகாதார மேற்பார்வையாளர் யூ.கே. காலித்தின் ஆகியோரின் நெரிப்படுத்தலிலும் இடம்பெற்ற சிரமதான நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவினர், கல்முனை மாநகர சபையின் ஏ வலயத்தின் திண்மக் கழிவகற்றல் பிரிவினது சுகாதார ஊழியர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரையோர சமூர்த்தி பயண்பெரும் பயணாளிகள் ஆகியோர் சேர்ந்து கடற்கரை பிரதேசத்தையும் அதனை அண்டியுள்ள பிரதேசத்தினையும் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
சிரமதான நிகழ்வுக்கு ஒத்துழைப்பு
வழங்கிய கல்முனை மாநகர முதல்வர், ஆணையாளர், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார பிரிவு பொருப்பதிகாரி, ஊழியர்கள், பிரதேச செயலாளர், சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள், சமூர்த்தி கரையோர பயணாலிகள் ஆகியோருக்கு சாய்ந்தமதுது பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் நன்றியினை தெரிவித்தார்.