சவாலை ஏற்று தெற்கில் நடக்கும் கொலைகளை அடக்குவேன் என தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். காலி மாபலகம சிறிசுநந்தா தேசிய பாடசாலையின் மாணவர் தலைவர்களுக்கு உத்தியோகபூர்வ பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அம்பலாங்கொட பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு 40 அதிகாரிகள் கொண்ட பொலிஸ் குழுவொன்று அப்பகுதியில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.