தற்போது பொருளாதார நிலை ஏற்பட்டுள்ள போதிலும் 75 ஆவது சுதந்திர தினத்தை விசேட நிகழ்வாக மாற்றி குறைந்த செலவில் பெருமையுடன் கொண்டாடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
75 ஆவது சுதந்திர தின நினைவேந்தல் குழுவின் முதலாவது கூட்டம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
பல்வேறு கலாசார கூறுகளை உள்ளடக்கிய 75 ஆவது தேசிய சுதந்திர தின விழா பெப்ரவரி 04 ஆம் திகதி மாலை கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஆயுதப்படை மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு மற்றும் வைபவங்களுக்கு மேலதிகமாக கலாசார கூறுகள் இலங்கையின் பெருமையும், இளைஞர்களுக்கு ஏற்ற கலைக் கூறுகளும் இதில் சேர்க்கப்பட்ட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாகக் குறிப்பிடப்படுகின்றது.
09 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசார கலை மற்றும் சமய நிகழ்ச்சிகள் அந்த மாகாணங்களின் அரசியல் அதிகாரம் மற்றும் அரச அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட வேண்டும், கல்வி அமைச்சினால் மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பாடசாலை மாணவர்களை கொண்டு பல்வேறு போட்டிகள் மற்றும் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். மாகாண மட்டத்தில் இளைஞர்களின் அழகியல் போன்றவை ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழும் வகையில் அர்த்தமுள்ள வகையில் ஏற்பாடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் சார்க் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சுதந்திர தினத்தின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பிரதான கேட்போர் கூடங்கள், திரையரங்குகள் மற்றும் கொழும்பு நெலும் பொக்குண தியேட்டர், டவர் ஹால், எல்பின்ஸ்டோன் மற்றும் ஜோன் டி சில்வா தியேட்டர் போன்றவற்றை குறிப்பிட்ட காலத்திற்கு மிகவும் சிறப்பு விலையில் வழங்குவதற்கு தேவையான பின்னணியை தயார் செய்யவும்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1996 வீடுகளை சுதந்திர தினத்துடன் இணைத்து நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், பேலியகொட, தெமட்டகொட, மொரட்டுவ, மஹரகம மற்றும் கொட்டாவ பிரதேசங்களில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.
கோட்டாவில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத் தொகுதி கலைஞர்களுக்காக ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனைத்து வீடுகளையும் அரசியல் அடிப்படையிலோ அல்லது சார்பு அடிப்படையிலோ அல்லாமல் முன்னுரிமை மற்றும் உரிய தேவையின் அடிப்படையில் வழங்குவதற்கு தேவையான அமைப்பு உடனடியாக தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
75 சுதந்திர தினத்துடன் இணைந்து, அனைத்து மாகாணங்களையும் முன்முயற்சியாகக் கொண்டு பல்வேறு கருப்பொருள்களின் கீழ் கண்காட்சிகளை நடத்துவதற்கும், தேவந்தரதுடுவை மற்றும் பெதுருதுடுவையை இணைக்கும் ஆர்ப்பாட்டமான சைக்கிள் சவாரியை ஏற்பாடு செய்வதற்கும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
மேலும், அன்றைய தினத்தை அடிப்படையாகக் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான பிரதிகள் கொண்ட சிறப்பு முத்திரை வெளியிடவும், கட்டுரைகள், அறிக்கைகள் போன்றவற்றை மறுபிரசுரம் செய்து மக்களுக்கு சுதந்திர தினப் பெருமையை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.