விளக்கமறியலில் வைக்கப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பிற்பகல் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டு பெண்கள் பிரிவில் தங்க வைக்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் அவரது உடல்நிலையை பரிசோதிக்க வந்த வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தமிதா அபேரத்னவை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பரிந்துரைத்துள்ளார். இதன காரணமாக சிறைச்சாலையினுடைய அதிகாரிகள் தமிதா அபேரத்னவினை வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதித்திருப்பதாக தெரியவருகின்றது .
ஒரு சாதாரண கைதி நோய்வாய்ப்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதில்லை. இவ்வாறானதொரு பின்னணியில், தமிதா அபேரத்ன மிகக் குறுகிய காலத்திற்குள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தமித அபேரத்ன மீது பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.