சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தத்தை முன்வைப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் தமக்கு அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் அவைத்தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்திற்கு இடையில் பேச்சு வார்த்தையும் இடம்பெற்றது.
பாராளுமன்றம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.