மக்களின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத பின்னணியில் 37 இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதன் மூலம் நாட்டின் செலவினச் சுமை அதிகரிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி ஒரு இராஜாங்க அமைச்சருக்கு ஐந்து பேர் கொண்ட ஊழியர்கள் இருப்பதாக உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இவர்களில் மூவருக்கு 03 வாகனங்களை அரசாங்கம் வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கண்டி, கட்டுகஸ்தோட்டையில் நடைபெற்ற சுதந்திர மக்கள் பேரவையின் கண்டி மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இன் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும் கலந்துகொண்டார்.