சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழு இன்று (11) அதிகாலை மட்டக்களப்பு கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தக் குழுவில் 60 ஆண்கள், 14 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 11 பேர் உள்ளனர்.
இவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மடு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்.