ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு நாளை (12) ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை இந்த அமர்வு இடம்பெறவுள்ளதுடன், இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அண்மையில் இலங்கை தொடர்பான அறிக்கையினை வெளியிட்டது.
இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் அரசியல் ரீதியில் நெருக்கடியான காலகட்டத்தையும் எதிர்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற போராட்டங்களினூடாக ஆட்சி மாற்றம் மற்றும் பொறுப்பு மற்றும் சீர்திருத்தங்களை மக்கள் எதிர்பார்த்துள்ளதாகவும், இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தேசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
கடந்த களங்களில் இலங்கையில் இடம்பெற்ற பொதுப் போராட்டத்தின் போது பொலிஸார் அதிக பலத்தை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்ததாகவும், இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சீர்திருத்துவது முக்கியம் என உயர்ஸ்தானிகர் பரிந்துரைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் பெடரிகோ வில்லேகாஸ் மற்றும் ஆணைக்குழுவின் பதில் உயர்ஸ்தானிகர் நடா நஷிப் ஆகியோரையும் சந்தித்தனர்.
இந்த நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு இயந்திரங்களை பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டதாக அலி சப்ரி தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது இலங்கையின் தற்போதைய நிகழ்வுகள் குறித்து விளக்கமளிப்பதற்காக மகிந்த சமரசிங்க அண்மையில் வாஷிங்டனில் உள்ள தூதரகத்தில் சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் சொத்து உரிமைகளுக்கான துணைச் செயலாளர் உஸ்ர சேயாவைச் சந்தித்தார்.
நாளை ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன, சமகி ஜன பலவகவின் எரந்த வெலியங்கே ஆகியோர் ஜெனீவாவிற்கு புறப்பட்டுள்ளனர்.