செப்டம்பர் 11 தாக்குதல் எனப்படும் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீது செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதலின் 21வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.
உலக வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தாக்குதல், செப்டம்பர் 11, 2001 அன்று காலை 9:37 மணிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 77 அல்-கொய்தா பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு நடத்தப்பட்டது.
தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பில்லாடன் ஆவர்.
இந்த தீவிரவாத தாக்குதலால் உலக வர்த்தக மையத்தின் இரு கோபுரங்களும் முற்றிலும் சேதமடைந்தன
ஒரே நேரத்தில் 25,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்த இந்தக் கட்டிடத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.